search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி சோதனை"

    • கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்
    • கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    கன்னியாகுமரி :

    விழுப்புரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆஸ்பத்திரி களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். குறிப்பாக மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் மீண்டும் சோதனை மேற் கொண்டனர். ஆனால் கள்ளச்சாராயம் எதுவும் சிக்கவில்லை.

    கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் பொது மக்கள் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரி விக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    • 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- 3 கடைகளுக்கு அபராதம்
    • 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் அறிவுரையின்பேரில் சுகாதார அதிகாரி முருகன் தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஸ் முன்னிலையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுதர்சிங், வரி வசூலிப்பாளர்கள் அமல் ராஜ், சரோஜா மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனை கன்னியாகுமரி சன்னதி தெரு, கடற்கரை சாலை, காந்தி மண்டப பஜார், மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப் பட்டது.

    இதில் சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் கப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் கூறும்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் தடையை மீறி பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    • 600 மது பாட்டில்கள் பறிமுதல்
    • நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தொழிலாளர் தினத்தை யொட்டி டாஸ்மாக் கடை கள் நேற்று மூடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி குமரி மாவட்டத்தில் மது விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ராஜாக்கமங்கலம் பகுதி யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த பரமார்த்தலிங்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்கோட்டை பகுதியில் மது விற்ற நாகராஜன் என்பவரை கைது செய்த வுடன் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களையும், ஈத்தங்காடு பகுதியில் மது விற்ற நாகராஜன் என்ப வரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 111 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீ சார் என்.ஜி.ஓ.காலனி ஒத்தக்கடை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த கன்னியாகுமரி குண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசாரின் அதிரடி சோதனை நடத்தினர்.

    அனுமதியின்றி மது விற்பனை செய்த 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 600 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 56 போலீசாரும், சிறை வார்டன் உள்ளிட்ட 65 சிறை காவலர்கள் சேர்ந்து வேலூர் ஜெயிலில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

    ஆண்கள் ஜெயிலில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

    இதேபோல போலீசார் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தினர்.

    2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோரும் தங்கி பனியன் தொழில் செய்து வருகின்றனர்.
    • உரிய ஆவணங்களை பெறாமல் கட்டிடத்தை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை கூறினர்.

    திருப்பூர்:

    தொழில் நகரமான திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோரும் தங்கி பனியன் தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் ராயபுரம் பகுதியில் நைஜீரியர்கள் வீடு எடுத்து காதர்பேட்டை பகுதியில் பனியன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    அதில் ஒருசிலர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதால் திருப்பூர் மாநகர போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவதுடன், ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பவர்களை கைது செய்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின்பேரில் வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின்படி கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அணில்குமார் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் திருப்பூர் ராயபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி இருந்த பகுதியில் வீடு வீடாக சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது போலீசாரை கண்டதும் நைஜீரியர்கள் சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் வியாபாரம் செய்து வந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நைஜீரியர்களின் அடையாள அட்டை உள்பட எந்த விதமான ஆவணங்களையும் வாங்காமல் அந்த நைஜீரியர்களுக்கு கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கட்டிட உரிமையாளரை எச்சரித்ததுடன், அந்த கட்டிடத்தில் தங்கி இருந்தவர்களின் விபரங்களையும், ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். இதுபோன்று உரிய ஆவணங்களை பெறாமல் கட்டிடத்தை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை கூறினர். இதனிடையே திருப்பூரில் முறைகேடாக தங்கியிருக்கும் நைஜீரியர்களை பிடிக்க போலீசார் ராயபுரம் உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனையொட்டி புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க புதுவை மாநில எல்லையோரங்களில் உள்ள 8 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், மாவட்டம் முழுவதும் மது விலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இதில் போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை அதாவது 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மது கடத்தல், மது விற்பனை செயலில் ஈடுபட்ட 127 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. ஆற்று திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுக்கடத்தலை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது.
    • 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்க ளான கஞ்சா, அபின், பிரவுன்சுகர், குட்கா, கூள்லிப், ஹன்ஸ் போன்றவைகள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலைய எல்லைகளில் 200 பேர் போதை பொருட்களை விற்பனை செய்துவருவதாக கண்டறி யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 22 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    • பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது

    திண்டுக்கல்:

    பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

    சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் இருப்புபாதை எல்லைக்குட்பட்ட மெட்டூர் ரெயில்வேபாலம் மற்றும் முருகன்பட்டி ரெயில்வே பாலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஸ்குமார், போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்நிலையங்களுக்கு வரும் பயணிகளை சோதனை நடத்தி அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    ஏதேனும் சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்கள் தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டன்ர. இன்று மாலை வரை இந்த சோதனை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • பொருட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களின் எடை விவரம், விற்பனை முனையம் சாதனத்தில் ஏற்றப்பட்டுள்ள பொருட் களின் விவரம், தற்பொழுது வரை வழங்கப் பட்டுள்ள பொருட்களின் விவரம்.

    நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவை தரமாக உள்ளதா எனவும், சரியான எடை அளவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணி த்தார். ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர்ஆதி சக்தி குமரி மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

    விழுப்புரம், அக்.9-

    விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றி குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை கொண்டு செல்வோரைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) தலைமை யிலான போலீசார் மற்றும் தனிப்படை பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

    அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இதற்கு காரணமான விழுப்புரம் கே. கே. ரோடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23), கீழ்பெரும்பாக்கம் மீனாட்சி ரைஸ் மில் தெருவை சேர்ந்த சுல்தான் மைதீன் ஆகிய 2 பேரை பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை
    • சோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என அதிகாரிகள் அறிவிப்பு

    வேலூர்:

    கர்நாடாகா, ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புல னாய்த்துறை டி.ஜி.பி ஆபாஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில், கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில் வேலூர் துனை கண்காணிப்பாளர் நந்தகுமார், ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீசார் வேலூரை சுற்றி உள்ள சோதனை சாவடிகளில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்,

    அதேபோல் நெல் அரவை ஆலைகளில் எதாவது கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இது போன்று சோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என்று தெரிவித்தனர்.

    ×